Posts

Showing posts from November, 2018

கறைகளும் கலையாகுமே..

அலைகளே கரைகள்    உனக்கு சொந்தமல்ல... இருந்தும் நீ கரையை அடைய ஓய்ந்ததல்ல... பிஞ்சுகளின் மாளிகை கரைகளில் மணமாக... உன் மனதிலோ அது கறையாக...  உன் கறையை அழிக்க கரைக்கு வந்தாயோ...              இல்லை பிஞ்சுகளின் திறமை மறைக்க கரைக்கு வந்தாயோ... திறமைக்கு தூணானால் உன் கறைகளும் கலையாகுமே தினம் ஒரு  மாளிகையிலே... மனக் கறைகளுக்கு தூணானால் உன் கரைகளுக்கும் கணமாவாயே நீ விரும்பும் நொடியிலே...
            அன்றும் இன்றும் நம் நட்பு   தயக்கத்தோடு தொடங்கிய வார்த்தைகள் அன்று... தடையில்லா உரையாடலாய் மாறியது இன்று... அருகில் நிற்க அஞ்சிய நொடிகள் அன்று... அசரும் நொடியில் அடிக்கும் உரிமை இன்று... கேள்விகள் கேட்க சிந்தித்த நொடிகள் அன்று... சிந்திக்க நொடியில்லா கேளிக்கைகள் இன்று... உன்னுடன் நடக்க பிறர் எண்ணம் என்னவோ??? அன்று... யார் எண்ணம் என்னவோ??? நீதான்  நான் இன்று...